திருவண்ணாமலையில் உரிய ஆவணமில்லாத ரூ.1.65 லட்சம் பறிமுதல்!
Mar 11, 2021, 13:16 IST1615448772000
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கு படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வடஆண்டாபட்டு பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவனை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையின்போது, வாகனத்தில்.1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது, அந்த நபர் திருவண்ணாமலை கோரிமேட்டை சேர்ந்த ஜாபர்அலி என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததும் தெரியவந்தது.
இதனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.