இதான் டாக் ஆஃப் தி டவுன்!! கிளைமாக்ஸில் வெல்லப் போவது யார்?

 

இதான் டாக் ஆஃப் தி டவுன்!! கிளைமாக்ஸில் வெல்லப் போவது யார்?

சுபமுகூர்த்த தினமான நாளை(8.2.2021) சசிகலா தமிழகம் திரும்புகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு சிறை சென்றவர் இடையில் இரண்டு முறை பரோலில் வந்து சென்றார். நாளை கர்நாடகாவின் தேவனஹல்லியில் இருந்து புறப்படும் அவருக்கு தமிழக எல்லையான ஓசூரிலிருந்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. வழிநெடுகிலும் சசிகலாவை வரவேற்று போஸ்டர், பேனர், கொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சசிகலாவின் வருகையால் தமிழக அரசியலே ஆடிப்போகியுள்ளது. என்னதான் நடக்கப்போகிறது என எதிர்க்கட்சியினரும், என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என ஆளுங்கட்சியினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதான் டாக் ஆஃப் தி டவுன்!! கிளைமாக்ஸில் வெல்லப் போவது யார்?

இந்நிலையில் நமது எம்ஜிஆர் நாளிதல், “சசிகலா தலைமையேற்று, செயல்பட்டால்தான் அதிமுக தழைக்கும் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் அவரை வரவேற்க தயாராகிவிட்டனர். தீய சக்தி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒற்றுமையுடன் ஒன்றுப்பட்டு, சசிகலாவின் தலைமையை ஏற்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் முரசொலி நாளிதழில், “சசிகலா, சென்னை வரவிருக்கும் செய்தி பழனிசாமி கூட்டத்தை நடுங்க வைத்துள்ளது. முதல்வர் பதவியை காக்க வரம் தந்த சசிகலா தலையிலேயே கைவைத்த காட்சிகள் துரோகத்தின் உச்ச கட்டம். சின்ன டானுக்கும் பெரிய டானுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகளில் வெல்லப்போவது யார் ?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.