‘டெல்லியில் பட்டாசுக்கு தடை’ மத்திய அமைச்சருக்கு டி.ஆர். பாலு கடிதம்!

 

‘டெல்லியில் பட்டாசுக்கு தடை’ மத்திய அமைச்சருக்கு டி.ஆர். பாலு கடிதம்!

டெல்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, திமுக எம்.பி டி.ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார்.

வட மாநிலங்களில் தற்போது காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் பெரும் பிரச்னையாக இருந்து வரும் காற்று மாசு பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு, 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘டெல்லியில் பட்டாசுக்கு தடை’ மத்திய அமைச்சருக்கு டி.ஆர். பாலு கடிதம்!

அதே போல ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களும், காற்று மாசை கட்டுப்படுத்த பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

‘டெல்லியில் பட்டாசுக்கு தடை’ மத்திய அமைச்சருக்கு டி.ஆர். பாலு கடிதம்!

இந்த நிலையில், பட்டாசு தடையை நீக்க வேண்டும் அல்லது தொழிலாளர் நலனுக்கு நிதி ஒதுக்கவேண்டும் எனக்கூறி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும், தொழில்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமாருக்கும் திமுக எம்.பி டி.ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார்.ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.