தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்!

 

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்!

கேரளாவில் தங்கக் கடத்தலில் ஸ்வப்னா என். ஐ. ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது.

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்!

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர்மல்க பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், அந்த ஆடியோவில், எனக்கும் அந்தப் பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறியிருந்தார். இதை தொடர்ந்து ஸ்வப்னாவை தேடி வந்த கேரள காவல்துறையினர், நேற்று பெங்களூருவில் வைத்து அவரையும், அவரின் நண்பரையும்  கைது செய்தனர்.

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்!

இந்நிலையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சியில் உள்ள என். ஐ. ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார். மதியம் 2 மணிக்கு அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.