“ஜஸ்ட் மிஸ்… இல்லைனா?” – பாபா ராம்தேவை காப்பாற்றிய மத்திய அமைச்சர்!

 

“ஜஸ்ட் மிஸ்… இல்லைனா?” – பாபா ராம்தேவை காப்பாற்றிய மத்திய அமைச்சர்!

பாரம்பரிய மருத்துவத்தையும் யோகாவையும் முன்னிறுத்தி அறிவியல் சார்ந்த அலோபதி மருத்துவத்தைத் தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி வருகிறார் சாமியார் என்று சொல்லப்படும் பாபா ராம்தேவ். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல். லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் உயிரிழக்கிறார்கள். ரெம்டெசிவிர், ஃபேபிஃப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டாலும் கொரோனாவை குணப்படுத்தவில்லை” என பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளைச் சுமத்திக் கொண்டிருந்தார்.

“ஜஸ்ட் மிஸ்… இல்லைனா?” – பாபா ராம்தேவை காப்பாற்றிய மத்திய அமைச்சர்!

அவரின் இப்பேச்சுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வன்மையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது. பாபா ராம்தேவ் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரவும் ஐஎம்ஏ நோட்டீஸ் அனுப்பியது. எந்த முழுமையான தகவலும் தெரியாமல் மக்களைத் தவறாக வழிநடத்தும் பாபாவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தது. இதுதொடர்பாக பாபா ராம்தேவ் தரப்பில், பாபா ராம்தேவ் தனக்கு வாட்ஸ்அப்பில் வந்த தகவலைத் தான் அந்நிகழ்ச்சியில் பேசியதாகவும், அது வைரலாகும் என தெரியவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதி அவரின் கருத்துக்களைத் திரும்பப் பெற கேட்டுக்கொண்டார். அந்தக் கடிதத்தில், மக்களால் பெரிதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மனிதாரகிய நீங்கள் கூறும் கருத்து பெரிதும் மதிக்கப்படும். களப்பணியில் உலகம் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டுள்ள கொரோனா போர் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உங்களின் அவதூறான, துரதிர்ஷ்டமான கருத்துக்களை திரும்பப் பெறுவீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“ஜஸ்ட் மிஸ்… இல்லைனா?” – பாபா ராம்தேவை காப்பாற்றிய மத்திய அமைச்சர்!

இதற்குப் பின்னர் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சுகாதாரத்துறை அமைச்சரே உங்கள் கடிதம் கிடைத்தது. நான் என்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.