உன்னதமான நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: திமுக அரசை பாராட்டிய எஸ்.வி.சேகர்!

 

உன்னதமான நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: திமுக அரசை பாராட்டிய எஸ்.வி.சேகர்!

திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.வி.சேகர், திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என இருக்கிறோம். எந்த ஒரு அரசும் வந்தவுடன் அவர்களது செயல்பாட்டை தொடங்குவார்கள். ஆனால், மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை ஒழிப்பதிலேயே முழு தீவிரம் காட்டியது. அவர்களால் மற்ற துறைகளில் கவனம் செலுத்த முடியாது. ஒரு சமயத்தில் ஒரு வேளை தான் செய்ய முடியும். நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை விடுவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்படும் அரசை தினமும் விமர்சனம் செய்வது வெற்றி அரசியலாக பார்க்கிறேன் என்று கூறினார்.

உன்னதமான நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: திமுக அரசை பாராட்டிய எஸ்.வி.சேகர்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை அனைத்து கட்சியினரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். குறை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஸ்டாலினின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு இதுவரை பிற கட்சியை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் திமுகவில் இணைகின்றனர். இத்தகைய சூழலில் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் திமுக அரசை பாராட்டியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.