மம்தாவுக்கு ஓட்டு போட்டால் மேற்கு வங்கம் மினி பாகிஸ்தானாக மாறும்.. சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை

 

மம்தாவுக்கு ஓட்டு போட்டால் மேற்கு வங்கம் மினி பாகிஸ்தானாக மாறும்.. சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை

மம்தா பானர்ஜிக்கு ஓட்டு போட்டால் மேற்கு வங்கம் மினி பாகிஸ்தானாக மாறும் என்று நந்திகிராம் மக்களை சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை செய்தார்.

மேற்கு வங்கம் நந்திகிராமில் சுவேந்து ஆதிகாரி பேசுகையில் கூறியதாவது: மம்தா பானர்ஜி வழக்கமாக ஈத் முபாரக் சொல்வார் அந்த பழக்கத்தில் ஹோலி அன்று மக்களுக்கு ஹோலி முபாரக் என்று வாழ்த்து தெரிவித்து விட்டார். பேகத்துக்கு (மம்தா பானர்ஜி) ஓட்டு போடாதீங்க.

மம்தாவுக்கு ஓட்டு போட்டால் மேற்கு வங்கம் மினி பாகிஸ்தானாக மாறும்.. சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை
மம்தா பானர்ஜி

நீங்கம் பேகத்துக்கு வாக்களித்தால், இந்த மாநிலம் மினி பாகிஸ்தானாக மாறும். சுபியனை தவிர பேகத்துக்கு எதுவும் தெரியாது. எதிர்வரும் தேர்தல்களில் தோல்வி அடைவோம் என்ற பயத்தால் மம்தா பானர்ஜி திடீரென கோயில்களுக்கு செல்ல தொடங்கினார். யோகி ஆதித்யநாத் போல், அவர் தனது மாநிலத்தை நிர்வகிக்கும் விதத்தில் நாமும் ஆட்சி செய்வோம்.

மம்தாவுக்கு ஓட்டு போட்டால் மேற்கு வங்கம் மினி பாகிஸ்தானாக மாறும்.. சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை
முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தால் மாற்றத்தை செய்ய முடிந்தால், நாமும் அதை செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில்தான் மம்தா பானர்ஜியும், சுவேந்து ஆதிகாரியும் எதிராக போட்டியிடுகின்றனர்.