சந்தேகப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி சாய்த்த கணவன்

 

சந்தேகப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி சாய்த்த கணவன்

கோவை மாவட்டம் வேளாண் பாளையம் மகேஸ்வரி காலனியில் வசித்து வருபவர் ஆனந்தகுமார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சந்தேகப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி சாய்த்த கணவன்

மதுபோதைக்கு அடிமையான ஆனந்தகுமார் தினமும் ஆட்டோ ஓட்டி விட்டு அதில் வரும் வருமானத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்றைய தினம் இரவு அப்படித்தான் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனால் செல்வி ஆனந்தகுமாரிடம் சண்டை போட்டிருக்கிறார்.

நீ வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறாய். அதனாலதான் வீட்டுக்கு தினமும் தாமதமாக வருகிறாய் என்று சண்டை போட்டிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், அங்கிருந்த கத்தியை எடுத்து செல்வியின் கழுத்தில் வேகவேகமாக குத்தி இருக்கிறார். இதில், ரத்தம் பீறிட்டு செல்வி மயங்கி விழுந்ததும். ஆனந்தகுமார் தப்பி ஓடியிருக்கிறார்.

சந்தேகப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி சாய்த்த கணவன்

ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த துடியலூர் போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் ஆனந்த் குமாரை இன்று அதிகாலை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.