“பேஷண்டும் இல்லே ,பொண்டாட்டியும் இல்லே” -கடுப்பான டாக்டர் பண்ண வேலைய பாருங்க.

 

“பேஷண்டும் இல்லே ,பொண்டாட்டியும் இல்லே” -கடுப்பான டாக்டர் பண்ண வேலைய பாருங்க.


வேலையை இழந்து ,மனைவியை பிரிந்த ஒரு டாக்டர் தன்னுடைய மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

“பேஷண்டும் இல்லே ,பொண்டாட்டியும் இல்லே” -கடுப்பான டாக்டர் பண்ண வேலைய பாருங்க.

சென்னையின் செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள மதுராந்தகத்தில் டாக்டர் கோகுல்குமார் என்பவர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பணியாற்றினார் . இவர் கொரானா தொற்றுநோய்களின் போது தனது வேலையை இழந்து விட்டார் .அதனால் வேலையில்லாத அவரின் மனைவி கீர்த்தனா அவரை விட்டு பிரிந்து அவரின் தாய் வீட்டிற்கு சென்று விட்டார் .
இதனால் அந்த டாக்டர் மிகவும் மன விரக்தியில் இருந்தார் .தனக்கு வேலையில்லாத இந்த நேரத்தில் மனைவி தன்னை விட்டு பிரிந்து தனியே போனதால் ,அவர் மீது அவருக்கு சந்தேகம் பிறந்துள்ளது .அதனால் அவர் அடிக்கடி மதரநதகத்தில் உள்ள அவரின் தாயார் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார் .இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டில் தனியே இருந்த கோகுல்குமார் , மனைவியின் மீது கடுமையான கோபம் கொண்டார் .அதனால் அவர் அவரிடமிருந்த ஆப்பரேஷன் செய்யும் ஒரு கத்தியை எடுத்து கொண்டு மனைவியின் வீட்டிற்கு சென்றார் .பின்னர் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .அதன் பிறகு அவர் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தில் வெட்டினார் .பிறகு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரின் மனைவியை தரதரவென்று சாலையில் இழுத்து சென்றார் .அதன் பிறகு அவர் அங்கேயே சுயநினைவை இழந்ததும் , அந்த டாக்டர் அங்கேயே விட்டு விட்டு காரில் தப்பித்து சென்றார் .பின்னர் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.அதன் பிறகு போலீசார் அந்த டாக்டர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தார்கள்

“பேஷண்டும் இல்லே ,பொண்டாட்டியும் இல்லே” -கடுப்பான டாக்டர் பண்ண வேலைய பாருங்க.