“தச்சிட்டா தப்பு பண்ண மாட்டே..” -சந்தேகப்பட்ட கணவன் மனைவியை எங்க தைச்சார் தெரியுமா ?

 

“தச்சிட்டா தப்பு பண்ண மாட்டே..” -சந்தேகப்பட்ட கணவன் மனைவியை எங்க தைச்சார் தெரியுமா ?


ஒரு மனைவி மீது சந்திக்கப்பட்ட கணவன் அவரின் தனிப்பட்ட பகுதியை தைத்து கொடுமைப்படுத்தியதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்

“தச்சிட்டா தப்பு பண்ண மாட்டே..” -சந்தேகப்பட்ட கணவன் மனைவியை எங்க தைச்சார் தெரியுமா ?


மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள மடா கிராமத்தில் ஒரு 55 வயதான நபர் தன்னுடைய 35 வயதான மனைவியோடு வசித்து வந்தார் .அந்த மனைவி மீது அந்த கணவனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது .அவர் அந்த ஊரிலிலுள்ள ஒருவரோடு கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாக அந்த கணவன் அந்த மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்தார் .
அப்போது அந்த மனைவி அவரிடம் தான் எந்த தவறும் செய்ய வில்லை என்று கூறி மன்றாடி கேட்டாலும் அந்த கணவன் நம்ப மறுத்தார் .அதனால் இருவர்க்கும் சண்டை அதிகமானது .இந்நிலையில் அந்த கணவன் ஒரு உலோக ஊசியை கொண்டு அந்த மனைவியின் தனிப்பட்ட பகுதியை தைத்து விட்டார் .பின்னர் அந்த நபர் அந்த பெண்ணை வீட்டின் ஒரு ரூமில் போட்டு அடைத்து கொடுமைப்படுத்தினார் .அதன் பிறகு அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த கணவன் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய அந்த கணவரை தேடி வருகின்றனர் .பிறகு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்