“என் பொண்ணை மோசம் பண்ணி ,பேத்தியை நாசம் பண்ணி, என்னையும்..” -குடும்பத்தையே குதறிய வாலிபர்.

 

“என் பொண்ணை மோசம் பண்ணி ,பேத்தியை நாசம் பண்ணி, என்னையும்..”  -குடும்பத்தையே குதறிய வாலிபர்.

ஒரு விதவை பெண்னோடு ஏற்பட்ட தவறான உறவில் உண்டான சந்தேகத்தால் அந்த குடும்பத்தையே அவரின் கள்ள காதலன் நாசம் செய்து விட்டார் .

“என் பொண்ணை மோசம் பண்ணி ,பேத்தியை நாசம் பண்ணி, என்னையும்..”  -குடும்பத்தையே குதறிய வாலிபர்.

ஆந்திராவில் உள்ள திருப்பதியில் உள்ள  தம்பல்லப்பள்ளியின் கோவிந்தாவரி பல்லே கிராமத்தில் வசிப்பவர் சரளா என்ற விதவை பெண் .இவர் தன்னுடைய மூன்று மகள்கள் மற்றும் வயதான தாயோடு வசித்து வருகிறார் .இந்நிலையில் அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த மவுலாலி என்ற வாலிபரோடு கள்ள உறவில் ஈடுபட்டு வந்தார் .அதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்கள் .

இந்நிலையில் மவுலாலி அந்த காதலியின் குடும்பத்தை எட்டிகாடா தண்டாவில் உள்ள தனது பண்ணை இல்லத்திற்கு மாற்றும்படி கூறினார் .ஆனால் அதற்கு அந்த பெண் சரளா சம்மதிக்கவில்லை.இதனால் அவர் அந்த சரளாவுக்கு வேறு ஒருவருடன் உறவிருப்பதாக  சந்தேகப்பட்டார்  .அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .இதனால் அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரின் காதலி சரளாவை கொலை செய்து அங்குள்ள ஒரு ஆற்றில் வீசிவிட்டார் .அதன் பிறகு அந்த சரளாவின் தாயார் தன்னுடைய மகளை பற்றி அவரிடம் கேட்டுள்ளார் .அதற்கு அவர் சரியான பதிலை கூறாமல் மழுப்பியுள்ளார் .இதனால் சரளாவின்  தாயார் தான் போலீசுக்கு போவதாக மிரட்டியதும் அவர் அந்த சரளாவின் தாயாரையும் கொலை செய்து விட்டார். அதன்  பிறகு சரளாவின் மகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் . பின்னர் அந்த நபர் சரளாவின் குழந்தைகளை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு  இடத்தில் ஒளித்து வைத்திருந்தார்

கடந்த வாரம், கோவிந்தாவரி பல்லே கிராமத்தைச் சேர்ந்த சரளாவின் உறவு  பெண், போலீஸை அணுகி இது பற்றி  புகார் அளித்தார். போலீஸ் தீவிர விசாரணைக்கு பின்னர்மவுலாலியை கைது செய்தனர் .அதன் பின்பு  திங்களன்று இறந்த இரு பெண்களின் சடலங்களையும் மீட்டனர்.  மேலும் இது பற்றி  விசாரணை நடத்தி , சரளாவின் குழந்தைகளை “சைல்டு ஹோம் “க்கு  மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தம்பல்லப்பள்ளி போலீசார் தெரிவித்தனர். .

“என் பொண்ணை மோசம் பண்ணி ,பேத்தியை நாசம் பண்ணி, என்னையும்..”  -குடும்பத்தையே குதறிய வாலிபர்.