சந்தேகப் புத்தி ! மனைவி, மகன்களை கொன்ற குடும்பத் தலைவன் ! மகாராஷ்டிராவில் சோகம் !

 

சந்தேகப் புத்தி ! மனைவி, மகன்களை கொன்ற குடும்பத் தலைவன் ! மகாராஷ்டிராவில் சோகம் !

!மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ளது. சுக்ரவர்பேத் பகுதி. இங்கு 35 வயது நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெத்-பீட் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கே காவல்துறை அதிகாரிகளிடம் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொன்றுவிட்டதாக வாக்குமூலம் தந்தார்.

சந்தேகப் புத்தி ! மனைவி, மகன்களை கொன்ற குடும்பத் தலைவன் ! மகாராஷ்டிராவில் சோகம் !
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சந்தோஷ் கோகனே என்பவரை கைது செய்தனர். அவர் வணிகம் செய்து வருகிறார். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், சந்தேஷ் மற்றும் மயூர் என்ற குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்த தகவலில், தன்னுடைய மனைவி மற்றொரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபடுவதாக சந்தோஷ் சந்தேகம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப சண்டை வீதிக்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் மனைவி சங்கீதாவின் தலையை கல்லால் அடித்து நொறுக்கினார். பின்னர் குழந்தைகள் சந்தேஷ் தலையில் கல்லைப் போட்டும், மயூரை நீர்த் தொட்டியில் மூழ்கடித்தும் கொன்றுள்ளார். 3 பேரையும் கொன்று ஆத்திரத்தை தணித்துக்கொண்ட சந்தோஷ்கோகனே பின்னர் காவல்நிலையம் வந்து வாக்கும் மூலம் தந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.