சுஷ்மா சுவராஜ் முதலாமாண்டு நினைவஞ்சலி!

 

சுஷ்மா சுவராஜ் முதலாமாண்டு நினைவஞ்சலி!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான சுஷ்மா சுவராஜ் தனது 67வது வயதில் உடல்நலக்குறைவினால் கடந்த ஆண்டு 6.8.2019 அன்று காலமானார்.

இன்று அவரது முதலாண்டு நினைவு தினம் என்பதால், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’எந்தப் பதவி வகித்தாலும் தனது முழு ஆளுமையையும் அர்ப்பணிப்பையும் காட்டி அதில் வெற்றி கண்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவரான முன்னாள் மத்திய அமைச்சர், பத்ம விபூஷண் சுஷ்மா சுவராஜ் அவர்களின் நினைவு தினத்தில் அவரின் உன்னத தேச வளர்ச்சிக்கான பங்களிப்பை நினைவு கூர்ந்து வணங்குவோம் ! என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், மூத்த தலைவராகவும் முன்னாள் மத்திய அமைச்சருமாக சேவையாற்றிய மரியாதைக்குரிய சுஷ்மா ஸ்வராஜ் ஜி அவர்களுக்கு எனது நினைவஞ்சலியை செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.