நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வலியுறுத்துங்க.. நடிகரின் சகோதரி டிவிட்டரில் வேண்டுகோள்

 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வலியுறுத்துங்க.. நடிகரின் சகோதரி டிவிட்டரில் வேண்டுகோள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, சுஷாந்த் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய அனைவரும் வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், சி.பி.ஐ. விசாரணைக்காக ஒரு தேசமாக நாம் ஒன்றாக நிற்கிறோம்! ஒரு பக்கசார்பற்ற விசாரணை கோருவது நமது உரிமை. உண்மை தவிர வேறு எதுவும் வெளிவராது என்று நாங்கள் நம்புகிறோம் என பதிவு செய்து இருந்தார்.நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வலியுறுத்துங்க.. நடிகரின் சகோதரி டிவிட்டரில் வேண்டுகோள்

மேலும் அதனுடன் அவர் பேசிய வீடியோ ஒன்றையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார். அதில் அவர், எல்லோரும் ஒன்றிணைந்து சி.பி.ஐ. விசாரணை கோர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். உண்மையை அறிய நாம் தகுதியானவர்கள். சுஷாந்திற்காக நாம் நீதிக்கு தகுதியானவர்கள். இல்லையெனில் நாங்கள் ஒருபோதும் மூடுவதை காண மாட்டோம். எங்களால் அமைதியான வாழ்க்கை வாழ முடியாது என பேசி இருந்தார். அந்த வீடியோவில், நான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி மற்றும் எஸ்.எஸ்.ஆருக்கா சி.பி.ஐ. விசாரணை கோருகிறேன் என எழுதப்பட்டு இருந்த அட்டையையும் கையில் எடுத்து காட்டினார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வலியுறுத்துங்க.. நடிகரின் சகோதரி டிவிட்டரில் வேண்டுகோள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கான காரணம் குறித்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அமலாக்கத்துறையும் விசாரணை செய்து வருகிறது. சுஷாந்த் மரண வழக்கில், நடிகை ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் மற்றும் தந்தையிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.