சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலைதான்! – மத்திய அமைச்சர் அத்வாலே

 

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலைதான்! – மத்திய அமைச்சர் அத்வாலே


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலையாக இருக்காது, கொலையாக இருக்கும் என்று கருதுகிறேன் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலைதான்! – மத்திய அமைச்சர் அத்வாலே


பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தன்னுடைய மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் இந்த தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சுஷாந்த் சிங்கின் காதலி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலைதான்! – மத்திய அமைச்சர் அத்வாலே

தொடர்ந்தார். அந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஃபரிதாபாத்தில் உள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங் மற்றும் அவரது சகோதரி ராணி சிங்கை இன்று திடீரென்று சந்தித்து பேசினார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலைதான்! – மத்திய அமைச்சர் அத்வாலே


பின்னர் இது குறித்து அத்வாலே கூறுகையில், “சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலை இல்லை, அது கொலை. அவர்கள் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடுகின்றனர். தற்போது நடந்து வரும் சி.பி.ஐ விசாரணை குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்” என்றார்.