சுஷாந்த் சிங் மறைவு: “பிரகாசமான இளம் நடிகர் சீக்கிரத்தில் நம்மை விட்டு சென்று விட்டார்” – பிரதமர் மோடி இரங்கல்

 

சுஷாந்த் சிங் மறைவு: “பிரகாசமான இளம் நடிகர் சீக்கிரத்தில் நம்மை விட்டு சென்று விட்டார்” – பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த செய்தியை அவரின் வீட்டு பணிப்பெண் போலீசில் தெரிவித்ததாக தெரிகிறது. எனினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் “சுஷாந்த் சிங் ராஜ்புத்…ஒரு பிரகாசமான இளம் நடிகர் மிக விரைவில் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். டிவியிலும், திரைப்படங்களிலும் அவர் சிறந்து விளங்கினார். பொழுதுபோக்கு உலகில் அவரது உயர்வு பலருக்கு உத்வேகம் அளித்தது. பல மறக்க முடியாத ஃபெர்பார்ம்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவர் காலமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.