சுஷாந்த் மரண விவகாரம்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு!

 

சுஷாந்த் மரண விவகாரத்தில் பாலிவுட் நடிகை கங்கனாவுக்கும் சஞ்சய் ராவத்துக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டதால் அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணம் தொடர்பாக தினமும் வெவ்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் சுஷாந்த் மரணம் பற்றி பேசிய நடிகை கங்கனா, அவரது மரணத்துக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்றும் அதற்கு தலைவராக கரண் ஜோகர் இருப்பதாகவும் வெளிப்படையாக பேசியிருந்தார். அதே போல, தனது புகாரை மும்பை காவல்துறை ஏற்க மறுப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறியிருந்தார்.

சுஷாந்த் மரண விவகாரம்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு!

கங்கனாவின் இந்த பதிவுக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து அனில் தேஷ்முக்கு ஆதரவு அளித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா மன்னிப்பு கேட்க விடும் என கூறினார். இதனால் அவருக்கும் கங்கனாவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகள் கிளம்பியதால், கங்கனாவின் சகோதரியும் அவரது தந்தையும் ஹிமாச்சலப் பிரதேச முதல்வரை தொடர்பு கொண்டு கங்கனாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சுஷாந்த் மரண விவகாரம்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு!

இந்த நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ‘ஒய் ப்ளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முன்னதாக கங்கனாவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் பிற மாநிலத்திலும் பாதுகாப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் ஹிமாச்சல முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.