உங்கள் துக்கத்தில் நாங்கள் தோள் கொடுப்போம் – ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்!

 

உங்கள் துக்கத்தில் நாங்கள் தோள் கொடுப்போம் – ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலே இருக்கும் வீரர் ரெய்னா. ஐபிஎல் 2020 க்காக ஆகஸ்ட் 15-20 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற பயிற்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார். சிரித்த முகத்தோடு ஐபிஎல் போட்டிகளில் ஆட, ஐக்கிய அமீரகத்திற்கும் சென்றார். ஆனால், என்ன காரணம் எனத் தெரியாமல் திடீரென்று இந்தியா திரும்பிவிட்டார். சுரேஷ் ரெய்னாவின் விலகல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் துக்கத்தில் நாங்கள் தோள் கொடுப்போம் – ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்!

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ’பஞ்சாப்பில் உள்ள என் குடும்பத்துக்கு நடந்தது ரொம்பவே கொடூரமானது. என் மாமா கொலை செய்யப்பட்டதோடு, என் சகோதரர்களும் அத்தையும் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலைக்குப் போனார்கள். அதில், என் சகோதரன் நேற்று இரவு இறந்துவிட்டார். என் அத்தையும் ரொம்ப ரொம்ப சிக்கலான கட்டயத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் துக்கத்தில் நாங்கள் தோள்கொடுப்போம். இதயமற்ற குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.