நடிகர் சூர்யாவுக்கு கொரானோ!

 

நடிகர் சூர்யாவுக்கு கொரானோ!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில், சாதாரண மக்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பாரபட்சமின்றி பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பலரையும் உயிரிழக்க செய்துள்ளது. அந்த வகையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பல அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். அமைச்சர் காமராஜ்க்கு கூட அண்மையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து பின் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

நடிகர் சூர்யாவுக்கு கொரானோ!

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.