திருமணமான 8 மாதத்தில் நில அளவையர் தூக்கிட்டு தற்கொலை!

 

திருமணமான 8 மாதத்தில் நில அளவையர் தூக்கிட்டு தற்கொலை!

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே திருமணமான 8 மாதத்தில் நில அளவையர் தூக்கிட்டு தற்கெலை செய்துகொண்ட சம்பவம் சேகாத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகன் திலீபன்(34). இவர் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், மருத்துவரான திவ்யா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருணம் நடைபெற்றது. திவ்யா புள்ளானேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

திருமணமான 8 மாதத்தில் நில அளவையர் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடி மாத அழைப்பிற்காக திவ்யாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, கடந்த ஞாயிறு அன்று அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்ல திலீபன் சென்றுள்ளார். அப்போது திவ்யாவின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அனுப்ப மறுத்து விட்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட திலீபன் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து திலீபனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.