சுருளிப்பட்டி ஊராட்சி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

 

சுருளிப்பட்டி ஊராட்சி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

தேனி மாவட்டத்தில் புதிதாக 171 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,492 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

சுருளிப்பட்டி ஊராட்சி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

அதன்படி தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சுருளிப்பட்டியில் வங்கி ஊழியர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் தொற்று ஏற்பட்ட பகுதிகளை சீல் வைத்து சிவப்பு மண்டலமாக அறிவித்தனா். பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாடக்கூடாது என்றும், அத்தியாவசிய கடைகளை தவிர வேறு எந்த கடைகளையும் திறக்கக்கூடாது என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.