பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்…பாராட்டும் நெட்டிசன்ஸ்!

 

பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்…பாராட்டும் நெட்டிசன்ஸ்!

தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் நடிகை சமந்தா. இதையடுத்து நடிகர் நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் பல சமூக பணிகளிலும் சமந்தா ஈடுப்பட்டு வருகிறார்.இந்த சூழலில் நடிகை சமந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் . அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தான் ஆட்டோ ஓட்டுநர் என்றும் தனக்கு ஏழு சகோதரிகள் இருக்கின்றனர்.

பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்…பாராட்டும் நெட்டிசன்ஸ்!

தனது பெற்றோர் இறந்து விட்டதால் சகோதரிகளை காப்பாற்றும் பொறுப்பு தன்னிடம் உள்ளது. எனவே ஆட்டோ ஓட்டி சம்பாதித்து அதில் வரும் பணத்தை கொண்டு தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் என்று கூறினார். இருப்பினும் ஆட்டோ ஓட்டும் வருமானம் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று அந்தப் பெண் நடிகை சமந்தா முன்னிலையில் தனது வருத்தத்தை தெரிவித்தார். இதை கேட்ட நடிகை சமந்தா, தனது சொந்த செலவில் கார் ஒன்றை வாங்கி தருகிறேன். அதை வைத்து டிராவல்ஸ் நடத்தி நீங்கள் அதிகப்படியான வருமானத்தை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தார் .

பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்…பாராட்டும் நெட்டிசன்ஸ்!

இந்நிலையில் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு தான் அளித்த வாக்குறுதியின்படி நடிகை சமந்தா கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் . அப்பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக ரூபாய் ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சமந்தா. சமந்தாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.