சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது?

 

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது?

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘சூரரைப் போற்று’. கொரோனா பரவலால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆன நிலையில், அக்.30ம் தேதி ‘சூரரைப் போற்று’ ஓடிடியில் வெளியானது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான இப்படத்தில், அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ஆஸ்கர் பொதுப்பிரிவு போட்டிக்குள் நுழைந்துள்ளது.

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது?

78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்ற பிரிவில் போட்டியிட சூரரைப்போற்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்கர் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் ஓடிடியில் வெளியான படங்களும் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடவுள்ளது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம் பெறவேண்டும். அதன்பின்னரே யார் வெற்றியாளர் என்பது ஆஸ்கர் விருது விழா மேடையில் அறிவிக்கப்படும். இதற்காக சூரரைப் போற்று திரைப்படம், அகாடமிக்கு அப்லோட் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் இப்படத்தை பார்த்து எந்தெந்த பிரிவில் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வர்.