“நான் எதையுமே தெரிஞ்சு செய்யல பிக் பாஸ்” கன்பஷன் ரூமில் கதறும் சுரேஷ்!

 

“நான் எதையுமே தெரிஞ்சு செய்யல பிக் பாஸ்” கன்பஷன் ரூமில் கதறும் சுரேஷ்!

சனம் மற்றும் சுரேஷ்க்கு இடையே எழுந்த பிரச்னையில், தான் ஏதும் தெரிந்து செய்யவில்லை என சுரேஷ் பிக் பாஸிடம் கதறுகிறார்.

“நான் எதையுமே தெரிஞ்சு செய்யல பிக் பாஸ்” கன்பஷன் ரூமில் கதறும் சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 4 தற்போது விறுவிறுப்படைய ஆரம்பித்துள்ளது. நேற்று ஹவுஸ்மேட்ஸை அரக்க குடும்பம் மற்றும் அரச குடும்பம் என இரண்டாக பிரித்த பிக் பாஸ் சுவாரஸ்யமான டாஸ்க் ஒன்றை கொடுத்தார். இதில் வழக்கம் போல பாலாஜி, அனிதா சம்பத்துக்கு சுரேஷுடன் கருத்து வேறுபாடுகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று வழங்கப்பட்டுள்ள டாஸ்க்கில் அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும், அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் மாறுகிறது.

“நான் எதையுமே தெரிஞ்சு செய்யல பிக் பாஸ்” கன்பஷன் ரூமில் கதறும் சுரேஷ்!

இன்று காலை வெளியான புரோமோவில், டாஸ்க் நடக்கும் போது சனம் ஷெட்டியை சுரேஷ் சக்கரவர்த்தி தாக்குவது போலவும், அதனால் ஆத்திரமடைந்த சனம் “வாடா வெளியே” என சுரேஷை திட்டுவது போலவும் காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான 3 ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

“நான் எதையுமே தெரிஞ்சு செய்யல பிக் பாஸ்” கன்பஷன் ரூமில் கதறும் சுரேஷ்!

அதில், ” சுரேஷை கன்பஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ், தெரிந்து செய்தீர்களா? எனக் கேட்கிறார். அதற்கு சுரேஷ், நான் தெரிந்து எதையுமே செய்யவில்லை என பதில் அளிக்கிறார். மேலும், எல்லாரும் என்னை கார்னர் செய்கிறார்கள். என் காதுக்கு பல விஷயங்கள் எட்டியது எனக்கூறி பிக் பாஸிடம் கதறி அழுவது போல புரோமோ முடிகிறது.

ஆரம்பித்து 2 வாரங்களிலேயே அழுகை, சிரிப்பு, கோபம் என போட்டியாளர்கள் பன்முகத்தை வெளிப்படுத்தும் பிக் பாஸில் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.