அணியில் நான் இல்லை என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை… சிஎஸ்கேவுக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

 

அணியில் நான் இல்லை என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை… சிஎஸ்கேவுக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

தோனி வெறியர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே 3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். கடந்த சில தினக்களுக்கு முன் சொந்த காரணங்களுக்காக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் அணியிலிருந்து வெளியேறிய விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா, “அணியில் நான் இல்லையென்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இருந்தாலும் என் வாழ்த்துக்கள் உங்களுடன் இருக்கும். வென்று வாருங்கள்!” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.