மீண்டும் களம் இறங்கும் ’சின்ன தல’ ரெய்னா – ஜனவரியில் அதிரடி

 

மீண்டும் களம் இறங்கும் ’சின்ன தல’ ரெய்னா – ஜனவரியில் அதிரடி

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பெரிய பலமாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. மிடில் ஆர்டரில் அணியை சமன்படுத்துவதாக இருக்கட்டும், பீல்டிங்கில் பவுண்ட்ரியை பந்து தொட்டுவிடாமல் செய்வதாகட்டும், பாய்ந்து கேட்ச்களைப் பிடிப்பதாகட்டும் ரெய்னாவின் பங்களிப்பு மகத்தானது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததும், ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். இது அவரின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கும் அனைவருக்குமே அதிர்ச்சியாகவே இருந்தது.

மீண்டும் களம் இறங்கும் ’சின்ன தல’ ரெய்னா – ஜனவரியில் அதிரடி

ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவின் அதிரடியைக் காணலாம் என்றிருந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் ஆட, ஐக்கிய அமீரகம் சென்றும், குடும்ப பிரச்னை காரணமாக தாயகம் திரும்பினார். ஒரு போட்டியில்கூட இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ரெய்னா ஆட வில்லை. தோனியை தல என்று அழைக்கும் சென்னை ரசிகர்கள், ரெய்னாவை சின்ன தல என்று கொண்டாடுவார்கள்.

ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஆடாததால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேற முடியவில்லை. ஒருவேளை ரெய்னா இருந்திருந்தால் இன்னும் ஒரு சுற்று முன்னேறியிருக்கும் என நிச்சயம் சொல்லலாம். ஏனெனில், மிடில் ஆர்டரில் விளையாடுவதில் சிஎஸ்கே தடுமாறியது.

மீண்டும் களம் இறங்கும் ’சின்ன தல’ ரெய்னா – ஜனவரியில் அதிரடி

அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ்காக ரெய்னா ஆடுவார் என நினைத்தால், அணி நிர்வாகம் அதை விரும்ப வில்லை என்றே தோன்றுகிறது. உதாரணமாக, சென்னை அணியில் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா விடுவிக்கப்பட்டதையும், அணியின் வாட்ஸ் அப் குரூப்பில் ரெய்னா நீக்கப்பட்டதையும் சொல்லலாம்.

ரெய்னா இனி கிரிக்கெட்டே ஆட மாட்டாரோ என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், தற்போது சையது முஷ்டாக் அலி தொடரில் ரெய்னா விளையாடுவதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ரெய்னா.

உத்திர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா இந்தத் தொடரில் ஆடவிருக்கிறார். ஜனவரியில் நடைபெற உள்ள போட்டிகளில் சின்ன தல ரெய்னாவின் அதிரடியை நிச்சயம் காணலாம்.