ஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

 

ஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் 1500 ஹெக்டேர் பரப்பளவில் 750 மெகாவாட் திறக் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின்திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்துவைத்து பிரதமர் மோடி பேசும்போது, “உலகளவில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் முதல் 5 நாட்களில் இந்தியா இருந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. மத்தியப்பிரதேச அரசு வருங்காலத்தில் சூழலுக்கு கேடில்லாத எரிசக்தியை குறைந்த விலையில் வழங்கும் மையமாக விளங்கும்.

ஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்இந்த சூரிய மின்சக்தி திட்டத்திலிருந்து கிடக்கும் மின்சாரம் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் பயன் அளிக்கப்போவதில்லை, டெல்லி மெட்ரோ ரயில்நிலையத்துக்கும் வழங்கப்பட உள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கிய நோக்கத்தில் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைவதாகும். தற்சார்பு பொருளாதாரம் எனும் இலக்கை அடைய சூரிய மின்சக்தி முக்கியப் பங்காற்றும்.
பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தலாமா அல்லது சுற்றுச்சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்தலாமா என உலக நாடுகள் ஊசலாட்டத்தில் இருக்கின்றன. சூரிய மின்சக்தி உறுதியானது சுத்தமானது, பாதுகாப்பானது. ஏனென்றால், உலகம் முழுவதும் சூரியன் தனது கதிர்களை பரப்பி வருகிறது. பாதுகாப்பானது ஏனென்றால் சூழலுக்கு எந்தவிதமான கேட்டையும் சூரியமின்சக்தி ஏற்படுத்தாது” என்றார்.

ஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும்போது ஓர் ஆண்டுக்கு மட்டும் 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் ஆண்டுக்கு 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுவது தடுக்கப்படும்.