வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

 

வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்வதை உடனே அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் சிறு, குறு, தொழில் கடன் போன்றவற்றுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.

வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 5ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டிக்கு வட்டி இல்லை என்பதை வங்கிகள் அமல்படுத்த தொடங்கி விட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

இதனையடுத்து, ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களிடம் பொதுமுடக்க காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவை உடனே அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.