பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக… சன்னி லியோன் சூசகப் பதிவு!

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக… சன்னி லியோன் சூசகப் பதிவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை நிலவரத்தைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. அப்போது கூட, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக… சன்னி லியோன் சூசகப் பதிவு!

குறிப்பாக கடந்த மே மாதத்தில் இருந்து எவரும் எதிர்பாராத அளவிற்கு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளும் சாமானிய மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அடையும் அபாயம் நிலவுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக… சன்னி லியோன் சூசகப் பதிவு!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பலர் குரல் எழுப்பி வருகின்றனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒரு வழியாக 100 ரூபாயை எட்டி விட்டது. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டு தான் சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சைக்கிளுக்கு மாற வேண்டுமென மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.