வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் தாயார் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்

 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் தாயார் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் தாயார் சுலோச்சனா சுப்ரமண்யம் நேற்று காலமானார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது தாயார் சுலோச்சனா சுப்ரமண்யம் இறைவனடி சேர்ந்த தகவலை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். அவர் டிவிட்டரில், என் தாயார் சுலோச்சனா சுப்ரமண்யம் இன்று (நேற்று) காலமானதை தெரிவிக்க மிகவும் வருத்தப்படுகிறேன். அவளுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவளை அவர்களின் எண்ணங்களில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் தாயார் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்
சுலோச்சனா சுப்ரமண்யம்

அவர் உடல்நல குறைவின்போது ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் குடும்பம் குறிப்பாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறது என பதிவு செய்து இருந்தார். மேலும் 80களில் எடுக்கப்பட்ட தனது தாயாரின் புகைப்படத்தையும் அதில் பகிர்ந்து இருந்தார். ஜெய்சங்கரின் தாயார் மரணத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ,பா.ஜ.க.வின் ராம் மாதவ், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் தாயார் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மறைந்த சுலோச்சனா சுப்ரமண்யம் தனது மகன்கள் ஜெய்சங்கர், எஸ்.விஜயகுமார் மற்றும் சஞ்சய் சுப்ரமண்யம் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் கே.சுப்ரமண்யம் ஒரு குறிப்பிடத்தக்க மூலோபாய விவகார நிபுணர் மற்றும் இந்தியாவின் அணுசக்தி கோட்பாட்டின் தந்தை என அறியப்படுபவர். அவர் கடந்த 2011ல் மரணம் அடைந்தார்.