விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பவர்கள்தான் தேச விரோதிகள்… பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய சுக்பீர் சிங் பாதல்

 

விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பவர்கள்தான் தேச விரோதிகள்… பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய சுக்பீர் சிங் பாதல்

விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பவர்கள்தான் தேச விரோதிகள் என்று பா.ஜ.க.வை சிரோன்மணி அகாலி தள கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை காலிஸ்தானியர்களுடன் ஒப்பிட்டு பேசியதாக தெரிகிறது. இதற்கு சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுக்பீர் சிங் பாதல் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பவர்கள்தான் தேச விரோதிகள்… பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய சுக்பீர் சிங் பாதல்
சுக்பீர் சிங் பாதல்

தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களில் எந்தவொரு அரசியல் கட்சியும் வெளிப்படையாக வெளிவரவில்லை என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதன் மூலம் இந்த போராட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல என்பதை வெளிப்படுத்தும். இரண்டாவதாக, இந்த போராட்டங்களில் வயதான பெண்கள் பங்கேற்கிறார்கள், அவர்கள் காலிஸ்தானியர்கள் போல் இருக்கிறார்களா? இது நாட்டின் விவசாயிகளை தேசதுரோகிகள் என்று அழைக்கும் ஒரு வழியாகும்.

விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பவர்கள்தான் தேச விரோதிகள்… பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய சுக்பீர் சிங் பாதல்
விவசாயிகள் போராட்டம்

இது நாட்டின் விவசாயிகளுக்கு ஒரு பெரிய அவமானம். அவர்கள் எங்கள் விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைக்க எவ்வளவு தைரியம்? யாரையும் தேச துரோகி என்று அறிவிக்க பா.ஜ.க.வுக்கோ அல்லது வேறு யாருக்காவது உரிமை உள்ளதா? அவர்களிடமிருந்து (பா.ஜ.க.) சான்றிதழ் யாருக்காவது (விவசாயிகளுக்கு) தேவையா? இந்த மக்கள் (விவசாயிகள்) தேசத்துக்காக தங்கள் உயிரை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இந்த தேசத்தை கட்டியிருக்கிறார்கள். அவர்கள் இந்த தேசத்துக்கு உணவளித்தார்கள். இப்போது நீங்கள் அவர்களை தேசவிரோதிகள் என்று அழைக்கிறீர்கள். அவர்களை தேச விரோதிகள் என்று அழைப்பவர்கள்தான் தேச விரோதிகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.