குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – உதவி ஆட்சியர் விசாரணை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – உதவி ஆட்சியர் விசாரணை!

தருமபுரி

தருமபுரி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து உள்ள போடூரை சேர்ந்தவர் கார்த்திக். பொக்லைன் ஆபரேட்டர். இவருக்கு, சங்கீதா ( 25) உடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – உதவி ஆட்சியர் விசாரணை!

கடந்த 11ஆம் தேதி இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சங்கீதா நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 5 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் இதுகுறித்து தர்மபுரி உதவி ஆட்சியர் சித்ரா விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.