குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

திருச்சி

தொட்டியம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, முசிறி சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள வடக்கு அரங்கூர் முல்லை நகரை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தை இல்லை. இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்ற வள்ளி, நேற்று குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, வள்ளியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்களில் பெண் உயிரிழந்ததால், வரதட்சணை கொடுமை காரணமா? என முசிறி சார் ஆட்சியர் ஜோதிசர்மா விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.