தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவி தீக்குளிக்க முயற்சி!

 

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவி தீக்குளிக்க முயற்சி!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற பஞ்சாயத்து தலைவி தடுத்து நிறுத்தப்பட்டதால் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் அடிலம் என்னும் ஊராட்சி தலைவர் தீபா. அவர் இன்று பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவகத்துக்கு மனு கொடுக்க சென்றுள்ளார். அடிலம் ஊராட்சிக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி இல்லாததால், அதனை பற்றி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தீபாவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் உள்ளே விடாமல் தடுத்துள்ளனர்.

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவி தீக்குளிக்க முயற்சி!

இதனால் பஞ்சாயத்து தலைவி தீபாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் தீபா, தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவரை காப்பாற்றி மனுவை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.இருப்பினும், பஞ்சாயத்து தலைவியும் உறுப்பினர்களும் நேரில் ஆட்சியரை சந்தித்து தான் மனு அளிப்போம் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.