மோடியை போல் கமல்ஹாசன் இருப்பார் – நடிகை சுஹாசினி

 

மோடியை போல் கமல்ஹாசன் இருப்பார் – நடிகை சுஹாசினி

சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே உடன் கூட்டணி அமைத்து களம் காணுகிறது மக்கள் நீதி மய்யம். அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அங்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் கமல்ஹாசனுக்கு வானதி சீனிவாசனுக்கு இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது. கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது மகள் அக்சரா ஹாசன், அண்ணன் மகள் சுஹாசினி மற்றும் ராதிகா என மகளிர் பட்டாளே வாக்கு சேகரித்தனர்.

மோடியை போல் கமல்ஹாசன் இருப்பார் – நடிகை சுஹாசினி

இந்நிலையில் இன்றை தேர்தல் பிரச்சாரத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுஹாசினி, “மோடி எப்படி தனி ஆளாக இருக்கின்றாரோ அதேபோல் கமல்ஹாசனும் தனி ஆளாக இருக்கிறார், இருப்பார், குடும்பத்தினர் யாரும் கமலுக்கு பிரச்சனை தர மாட்டார்கள். மோடிக்கு அரசியலில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் அவருக்கு குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, அதேபோல் கமலஹாசனுக்கும் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் அவர் கட்சியில் இருப்பவர்கள் யாராவது தவறு செய்தால் அவர் சும்மா விட மாட்டார்” என்று கூறினார்.