6 மாதமாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பு: மூடிக்கிடக்கும் தண்டுரை மீன் மார்க்கெட்டை திறக்க கோரும் வியாபாரிகள்

 

6 மாதமாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பு: மூடிக்கிடக்கும் தண்டுரை மீன் மார்க்கெட்டை திறக்க கோரும் வியாபாரிகள்

ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, பிள்ளையார் கோயில் தெருவில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் கடந்த 2002ஆம் ஆண்டு அப்போதைய ஆவடி நகராட்சி சார்பில் ரூ.22லட்சம் செலவில் கட்டப்பட்டது. இங்குள்ள 58கடைகளில் மீன், கருவாடு மற்றும் காய்கறிகளையும் விற்பனை செய்து வந்தனர். இந்த மார்க்கெட்டில் ஆவடி, பட்டாபிராம், சோராஞ்சேரி, சித்துக்காடு, அன்னம்பேடு,  கருணாகரசேரி, மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மக்கள் மீன்கள், காய்கறிகளை வாங்கி சென்று வந்தனர். இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஞாயிறு  உள்ளிட்ட விடுமுறை நாட்களில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் வந்தனர்.

6 மாதமாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பு: மூடிக்கிடக்கும் தண்டுரை மீன் மார்க்கெட்டை திறக்க கோரும் வியாபாரிகள்

இந்த மார்க்கெட் குறுகிய இடத்தில் இருப்பதால், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து, கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த மே மாதம் மீன் மார்கெட்டை மாநகராட்சி நிர்வாகம் இழுத்து மூடியது. தற்போது, இந்த மார்க்கெட்டில் எவ்வித பராமரிப்பு இன்றி சேதமடைந்து கிடக்கிறது. மேலும், இந்த மார்க்கெட் மூடிய போது அப்படியே போட்டு சென்ற மீன் கழிவுகள் தூர்நாற்றம் வீசுகின்றன.

இந்த மார்க்கெட் மூடிய பிறகு, சில வியாபாரிகள் தண்டுரை மெயின் ரோட்டில் ஆங்காங்கே மீன்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும், வெயில், மழையால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், வெயிலால் மீன்கள் கெட்டு விடுகின்றன. மேலும், வியாபாரிகள் பலர் கடைகளை வைக்க முடியாமல், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

6 மாதமாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பு: மூடிக்கிடக்கும் தண்டுரை மீன் மார்க்கெட்டை திறக்க கோரும் வியாபாரிகள்

இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மூடப்பட்ட மீன் மார்க்கெட்டை திறந்து வியாபாரிகள் வியாபாரத்தை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் வியாபாரிகள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.