குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!

 

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!

குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!

கொரோனா நோய் தொற்று காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க நேரக்கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில் வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்றில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!

இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட்டுள்ளதால் பயணிகள் செல்லாத வண்ணம் தென்காசி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.