‘கொரோனா தடுப்பூசி தயாரிக்கும்’ சீரம் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து!

 

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்கும்’ சீரம் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் சிறிது நேரத்திற்கு முன்னர் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்கும்’ சீரம் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து!

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனத்தில் சிறிது நேரத்திற்கு முன்னர் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திடீரென தீ விபத்திற்கான காரணம், பொருட்கள் சேதம் குறித்த விவரங்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நம் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் தீ விபத்தில், எரிந்து சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.