கல்லட்டி மலைப்பாதையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து!

 

கல்லட்டி மலைப்பாதையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து!

நீலகிரி

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் நேற்று தனது உறவினர்கள் சபரிஷ், சனவிகா உள்ளிட்ட 6 பேருடன் நீலகிரி மாவட்டத்திற்கு காரில் சுற்றுலா சென்றார். காரை சலீம் என்பவர் ஓட்டிச் சென்றார். உதகையில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதையில் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, திடீரென காரின் முன் பகுதியில் தீப்பற்றியது.

கல்லட்டி மலைப்பாதையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து!

இதனை கண்ட சலீம் உடனடியாக வாகனத்தை நிறுத்தி, காரில் இருந்து அனைவரையும் வெளியேற்றினார். இந்த நிலையில், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், கார் சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உதகை தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேர போராட்டத்துக்கு பின் அவர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.