வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து; சென்னையில் பரபரப்பு!

 

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து; சென்னையில் பரபரப்பு!

சென்னை அண்ணாசாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்திற்குள் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள கட்டிடத்தில் இன்று பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ராட்சத கிரேன் மூலம் தண்ணீர் பாய்ச்சி அடித்தும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், கட்டிடத்தில் சிக்கியிருந்த மக்கள் அந்த கிரேன் மூலமாகவே மீட்கப்பட்டுள்ளனர்.

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து; சென்னையில் பரபரப்பு!

தீயை அணைக்கும் பணியில் 50 வீரர்கள் துரிதமாக செயல்பட்டதாகவும் கட்டிடத்தில் சிக்கியிருந்த 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் மொத்தம் அந்த கட்டிடத்தில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த கட்டிடத்தில் இருந்த கணினி விற்பனை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ கட்டிடத்தின் சில பகுதிகளுக்கு பரவியது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.