கொரோனாவில் இருந்து மீண்டார்… வீட்டில் குவாரண்டைன்… செவிலியர் திடீர் உயிரிழப்பு!

 

கொரோனாவில் இருந்து மீண்டார்… வீட்டில் குவாரண்டைன்… செவிலியர் திடீர் உயிரிழப்பு!

கொரோனாவில் இருந்து மீண்ட வந்த ராமநாதபுரம் செவிலியர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பாண்டியூரை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கலைக்செல்வி (39), இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். தினந்தோறும் பணிக்கு சென்ற வந்த கலைக்செல்வி, கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில், கலைச்செல்வியை கொரோனா தொற்று தாக்கியது. இதையடுத்து, ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கலைச்செல்வி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே, பூர்ண சுகமடைந்த கலைச்செல்வி, வீடு திரும்பினார். இருந்தாலும் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில், கலைச்செல்விக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவில் இருந்து மீண்டும் வந்த செவிலியர் திடீரென உயிரிழந்த சம்பவம் சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.