போக்சோ சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி திடீர் மரணம்!

 

போக்சோ சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி  திடீர் மரணம்!

புழல் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி  திடீர் மரணம்!

தமிழகத்தில் சிறை கைதிகள் சிறையில் உயிரிழக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை மரணம், விருத்தாச்சலம் செல்வகுமார் மர்ம மரணம் என பல மரணங்கள் சந்தேகத்திற்குரிய ஒன்றாக மாறி வருகிறது. இதனால் காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்சோ சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி  திடீர் மரணம்!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் போக்சோ சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த கைதி இன்று உயிரிழந்தார். சிறை மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கைதி கிரண்குமார் உயிரிழந்தார். கிரண்குமார் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.