கங்கனா ரணாவத்துக்கு ஆதரவு கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி.. சிவ சேனா அதிர்ச்சி

 

கங்கனா ரணாவத்துக்கு ஆதரவு கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி.. சிவ சேனா அதிர்ச்சி

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மற்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குரல் கொடுத்துள்ளனர்.

பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில், கங்கனாவிடம் நம்பிக்கையை வைத்திருக்க சொல்லுங்கள். இந்த போராட்டத்தில் நாங்கள் அவளுடன் இருக்கிறோம் என பதிவு செய்து இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக கங்கனா ரனாவத்துக்கு ஆதரவு கொடுத்து இருப்பது நிச்சயம் சிவ சேனாவை யோசிக்க செய்யும் என பேசப்படுகிறது. சுப்பிரமணியன் சுவாமி யாருக்கும் ஆதரவாக எளிதில் பேசமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கனா ரணாவத்துக்கு ஆதரவு கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி.. சிவ சேனா அதிர்ச்சி
சுப்பிரமணியன் சுவாமி

இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: எனக்கு முழு உண்மையும் தெரியாது. ஆனால் சஞ்சய் ரவுத்தின் கருத்து முற்றிலும் வேண்டப்படாதது. ரவுத் என்னுடைய நல்ல நண்பர், ஒரு சிவ சேனா தலைவர், கட்சியின் செய்திதொடர்பாளர் மற்றும் சாமனாவின் ஆசிரியர் ஆவார். முழு உண்மையும் எனக்கு தெரியாது. ஆனால் அவர் நடிகையை அச்சுறுத்தியிருந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சுஷாந்த சிங் ராஜ்புத்துக்கு நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் அனைவரும் ரனாவத் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கிறோம் என தெரிவித்தார்.

கங்கனா ரணாவத்துக்கு ஆதரவு கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி.. சிவ சேனா அதிர்ச்சி
ராம்தாஸ் அத்வாலே

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பேசியது முதல் அவருக்கும் சஞ்சய் ரவுத்துக்கும் இடையே கடும் வார்த்தை போர் நிலவுகிறது. இந்நிலையல் கங்கனா ரனாவத் நேற்று முன்தினம் டிவிட்டரில், சிவ சேனா தலைவர் சஞ்சய் ரவுத் எனக்கு ஒரு வெளிப்படையான அச்சுறுத்தல் கொடுத்தார், மும்பைக்கு திரும்பி வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மும்பை வீதிகளில் ஆசாதி கிராபிடிஸ் மற்றும் இப்போது வெளிப்படையான அச்சுறுத்தல்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் ஏன் மும்பை உணருகிறது என பதிவு செய்து இருந்தார்.