பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

 

பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் பெற்றோர் திமுக தலைவர் முக ஸ்டாலினைச் சந்தித்தனர்.

காற்றில் விழுந்த பேனரில் சிக்கி, பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்த சுபஸ்ரீயை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனரால் சாலையில் நிலைதடுமாறி விழுந்து, தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டம் காண செய்தது. இந்த விவகாரத்திற்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதுவும் காற்றில் பறக்கவிடப்பட்டது என்பது தனிக்கதை.

பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

இந்நிலையில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோர் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் மூலம் ரூ.20 லட்சம் நிவாரணம் பெற்றுத்தந்த ஸ்டாலினுக்கு சுபஸ்ரீ பெற்றோர்கள் நேரில் நன்றி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.