“இது சினிமா காட்சி அல்ல” : திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் – இன்ஸ்பெக்டர் : சென்னை கமிஷ்னர் பாராட்டு!

 

“இது சினிமா காட்சி அல்ல” : திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் – இன்ஸ்பெக்டர் : சென்னை கமிஷ்னர் பாராட்டு!

செல்போன் பறிப்பு கொள்ளையர்களை காவலர் ஒருவர் விரட்டி பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வரும் திருடர்கள் சிலர், செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற நாசவேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் காயங்களுடன் தப்பினாலும் சிலரின் உயிரோ பறிபோய் விடுகிறது.

“இது சினிமா காட்சி அல்ல” : திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் – இன்ஸ்பெக்டர் : சென்னை கமிஷ்னர் பாராட்டு!

இந்நிலையில் சென்னையில் நடந்து சென்ற ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்து கொண்டு தப்பியுள்ளனர். இதைக்கண்ட மாதவரம் சப்-இன்ஸ்பெக்டர் அண்டிலின் ரமேஷ் கொள்ளையர்களை தனது பைக்கில் விரட்டி சென்றார். இதில் ஒருவர் தப்பிவிட, மற்றொருவன் வாகனத்தை எடுத்து கொண்டு தப்பி முயல,லாவகமாக மடக்கி பிடித்தார் துணிச்சல்மிக்க அந்த காவலர்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இது திரைப்படத்தில் வரும் காட்சி இல்லை. எஸ்ஐ அண்டிலின் ரமேஷ் தனி ஒருவராக போராடி திருடர்களை பிடித்த காட்சி தான் இது என்று பதிவிட்டு காவலரை பாராட்டியுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் அண்டிலின் ரமேஷின் இந்த செயலால் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.