சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய எஸ்.ஐ- ஆயுதப்படைக்கு மாற்றம்

 

சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய எஸ்.ஐ- ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆம்பூர் அருகே சாராய வியாபாரி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, கேக் ஊட்டிய எஸ்.ஐ இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஸ்வநாதன்.

சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய எஸ்.ஐ- ஆயுதப்படைக்கு மாற்றம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மிட்டாளம் ஊராட்சியின் சாராய வியாபாரி அஜீத் என்பவரின் பிறந்த நாள் விழாவில், எஸ்.ஐ. விஸ்வநாதன் கலந்து கொண்டுள்ளார். சாராய வியாபாரிக்கு எஸ்.ஐ. சால்வை அணிவித்தும், கேக் ஊட்டிய போட்டோக்களும் வெளியாகி சர்ச்சை ஆனது.

இதையடுத்து தகவலின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிட்ட
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.