“நேரம் கருகி ஓடுகிறது… முடிவுகளை விரைந்து எடுங்கள்” – அலர்ட் செய்யும் சு.வெங்கடேசன் எம்பி!

 

“நேரம் கருகி ஓடுகிறது… முடிவுகளை விரைந்து எடுங்கள்” – அலர்ட் செய்யும் சு.வெங்கடேசன் எம்பி!

தமிழகத்திற்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பியூஷ் கோயலிடம் செல்போன் வாயிலாக பேசிய ஸ்டாலின் இதனைக் கேட்டிருக்கிறார். தற்போது இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இடம் ஓர் அவசரக் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.

“நேரம் கருகி ஓடுகிறது… முடிவுகளை விரைந்து எடுங்கள்” – அலர்ட் செய்யும் சு.வெங்கடேசன் எம்பி!

ஒரு நோயாளிக்கு 6 குப்பிகள் வீதம் 1,166 நோயாளிகளுக்கு மட்டுமே கொடுக்ககூடிய ரெம்டெசிவிர் மருந்தை மத்திய அரசு அளிக்கிறது. இந்த தினசரி அளவை 3 மடங்காக உயர்த்த அவர் கோரியுள்ளார். தின அளிப்பை 7000 லிருந்து 20000 ஆக உயர்த்துமாறு அவர் கோரியுள்ளார். ரெம்டிசிவிர் மருந்தானது நெஞ்சகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு அவசரமாய்த் தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கும் அளிப்பிற்குமான இடைவெளி மிகப் பெரிதாக உள்ளது.

தமிழகத்தின் தேவை பற்றி முதல்வர் கூறுவதற்கு நான் கள சாட்சியத்தை மதுரையில் காண்கிறேன். மதுரைக்கு தின அளிப்பு 500 மட்டுமே. ஒரு நோயாளிக்கு ஆறு குப்பிகள் வீதம் தினமும் 80 நோயாளிகளுக்குகே போதுமானது. ஆனால் மருந்து வாங்குகிற வரிசை மிக நீண்டதாக உள்ளது. எண்ணிக்கை 250 பேரைக் கடக்கிறது. இந்த இடைவெளி இன்னும் விரிவடைந்ததால் என்ன ஆகும் என்ற கவலை மனதைக் கவ்வுகிறது. விளைவுகள் மிக மோசமானதாக அமையும். நேரம் கடுகி ஓடுகிறது. முடிவுகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.