தனியார் விடுதியில் ஸ்டூடியோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை!

 

தனியார் விடுதியில் ஸ்டூடியோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை!

நெல்லை

நெல்லையில் தனியார் விடுதியில் ஸ்டூடியோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஆண்டனி பாரதி (35). இவர் அதே பகுதியில் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பாரதி நேற்று முன்தினம் நெல்லை ஜங்சன் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

தனியார் விடுதியில் ஸ்டூடியோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை!

மறுநாள் காலை நீண்டநேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜங்சன் போலீசார் விடுதி அறை கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, ஜஸ்டின் ஆண்டனி பாரதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.