மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்! – டி.டி.வி வலியுறுத்தல்

 

மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்! – டி.டி.வி வலியுறுத்தல்

கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்! – டி.டி.வி வலியுறுத்தல்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு  மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும்  மாணவர்களும்  அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

http://

இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால், அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே,மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும்; மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என தமிழக முதல்வர்  உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்! – டி.டி.வி வலியுறுத்தல்

மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது” என்று கூறியுள்ளார்.