மாயமாகிய மாணவிகள்- போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!

 

மாயமாகிய மாணவிகள்- போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!

பெற்றோர் திட்டியதால் மாயமாகிய பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர், கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் இருந்தபடியே இருவரும் படித்து வந்துள்ளனர்.

மாயமாகிய மாணவிகள்- போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!

இந்த நிலையில், வீட்டு வேலைகளை செய்யவில்லை என பெற்றோர் திட்டியதால், மனமடைந்த மாணவிகள் இருவரும் திடீரென வீட்டை விட்டு வெளியேறி மாயமாகியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரும்பாலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

மாயமாகிய மாணவிகள்- போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!

போலீசார் மாணவிகளை தீவிரமாக தேடியபோது, அவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்தில் உறவினர் வீடு ஒன்றில் ரகசியமாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மாணவிகளை அழைத்து வந்த போலீசார் அவர்களுக்கு போதிய ஆலோசனை அளித்து அவரவர் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.